வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று ஜனவரி 09 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சுசரிதோதய அறநெறி பாடசாலையும் பரீட்சை நிலையங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.இம்முறை 04 கைதிகள் பரீட்சை எழுதவுள்ளனர்.
இந்த தண்டனை கைதிகளை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றும் நோக்கில் அனைத்து சிறைச்சாலைகளிலும் அறநெறி பாடசாலை கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், சிறை அதிகாரிகளும் வெளி ஆசிரியர்களும், தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த கைதிகளும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றமை குறிபிப்பிடத்தக்கது.