follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவெலிக்கடை கைதிகளுக்கு தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு!

வெலிக்கடை கைதிகளுக்கு தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு!

Published on

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று ஜனவரி 09 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சுசரிதோதய அறநெறி பாடசாலையும் பரீட்சை நிலையங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.இம்முறை 04 கைதிகள் பரீட்சை எழுதவுள்ளனர்.

இந்த தண்டனை கைதிகளை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றும் நோக்கில் அனைத்து சிறைச்சாலைகளிலும் அறநெறி பாடசாலை கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், சிறை அதிகாரிகளும் வெளி ஆசிரியர்களும், தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த கைதிகளும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றமை குறிபிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...