follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉலகம்பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

Published on

பிரேசிலில் கோயாஸ் மாநிலத்தின் அபரேசிடா டி கோயானியா நகரில்  68 வயது வயோதிபர் ஒமிக்ரோன் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் 68 வயதான நுரையீரல் நோய் காரணமாக  உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தவர் என அபரேசிடா டி கோயானியா நகர சபையின் தகவல் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான வயோதிபர் மூன்று தடுப்பூசி போட்டவராவார்.

அபரேசிடா டி கோயானியா நகரில் ஒமிக்ரோன் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட 10 நாட்களின் பின்னர் மரணம் நிகழ்ந்ததாக உள்ளூர் சுகாதார செயலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரோன் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரேசில் 2 கோடியே 23 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 619,641 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

1967 எல்லைகளின் அடிப்படையில் பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க வேண்டும் – அதுவே எம் நிலைப்பாடு – அமெரிக்காவுக்கு சவுதி இளவரசர் பதில்

கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராக கொண்ட சுயாதீன தனியான பலஸ்தீன் நாட்டை உருவாக்க சவுதி அரேபியா தொடர்ந்தும் முயற்சி செய்யும்...

இராணுவ விமானம் மூலம் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் இராணுவ விமானம் மூலம் இன்று பஞ்சாப்...

USAID இன் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறை

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில்...