follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

Published on

பிரேசிலில் கோயாஸ் மாநிலத்தின் அபரேசிடா டி கோயானியா நகரில்  68 வயது வயோதிபர் ஒமிக்ரோன் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் 68 வயதான நுரையீரல் நோய் காரணமாக  உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தவர் என அபரேசிடா டி கோயானியா நகர சபையின் தகவல் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான வயோதிபர் மூன்று தடுப்பூசி போட்டவராவார்.

அபரேசிடா டி கோயானியா நகரில் ஒமிக்ரோன் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட 10 நாட்களின் பின்னர் மரணம் நிகழ்ந்ததாக உள்ளூர் சுகாதார செயலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரோன் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரேசில் 2 கோடியே 23 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 619,641 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...