2021 ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன சிறுவர்கள் இருவரும் மீரிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சிறுவர்கள் இருவரும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.