follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு50,000 பட்டதாரிகளின் சேவை நிரந்தரம் : மாதாந்த கொடுப்பனவும் உயர்வு

50,000 பட்டதாரிகளின் சேவை நிரந்தரம் : மாதாந்த கொடுப்பனவும் உயர்வு

Published on

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு  பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

50,000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிரந்தர நியமனத்துடன் அவர்களது வேதனம் 31,490 ஆக உயர்த்தப்படுவதுடன் ஏனைய கொடுப்பனவுகளுடன் அவர்களுக்கு மாதாந்தம் 41,490 ரூபா வழங்கப்படும்.

இந்த பட்டதாரி பயிலுனர்கள் இதுவரை மாகாண சபைகள், மாவட்ட செயலகம், பிரதேச செயலாளர் காரியாலயம், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அபிவிருத்தி அதிகாரியாக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...