follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்உஸ்பெகிஸ்தானில் இருந்து பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள்!

உஸ்பெகிஸ்தானில் இருந்து பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள்!

Published on

உஸ்பெகிஸ்தானில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலான வெளிநாட்டு பெண்கள் அரசாங்க தங்குமிடங்களில் ஆதரவைப் பெறத் தயங்குகிறார்கள், அதற்குப் பதிலாக ஐ.நா. முகவர் நிலையங்கள் அல்லது தனியார் தங்குமிடங்களை விரும்புகிறார்கள் என்று அதிகாரி கூறினார்.

மேலு, இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை 2 அல்லது 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

சக்திவாய்ந்தவர்களின் ஆதரவுடன் இயங்கும் சில விபசார விடுதிகளுடன் உள்நாட்டு கடத்தல் தொடர்கிறது. எனவே இதுபோன்ற விபசார விடுதிகள் குறித்து அடிக்கடி எச்சரிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவதைத் தடுத்தல் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் மனித கடத்தல் தடுப்பு செயலணியானது தீர்மானித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...