தற்போது நிலவும் எரிவாயு நெருக்கடியால் மண்ணெண்ணெய் மற்றும் விறகுக்கு அதிக தேவை உள்ளது.
இருப்பினும் மண்ணெண்ணெய்க்கும் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது விறகுகளை பயன்படுத்த பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பல்பொருள் அங்காடிகள் விறகு விற்பனை செய்ய தொடங்கியுள்ளன.
ரூ.100 முதல் ரூ.400 வரையிலான விறகு கட்டுக்களை பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்
மேலும் இணையதளத்தின் மூலமும் தற்போது விறகு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.