செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக நாடு முழுவதும் இணையத்தள வசதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இதன்படி, செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணையத்தள வசதிகளை வழங்கும் அமெரிக்க நிறுவனமான STARLINK நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை, இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு இணையத்தள வசதிகளை வழங்கும் நோக்கிலேயே, இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கடல் வழியாக 7 சப்மேரின் கேபள் ஊடாக, இலங்கைக்கு இணையத்தள இணைப்பு தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.