follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் எடை குறைந்த குழந்தைகள் அதிகரிப்பு

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகள் அதிகரிப்பு

Published on

தெற்காசியாவில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் இருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் நடத்திய ஆய்வில், இலங்கை மற்றும் இந்தியாவில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நாடுகளை தவிர பப்புவா நியூகினியா, மாலைதீவு, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று நோயின் பாதிப்பு காரணமாக இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலைமை ஆபத்துக்கு உள்ளாகும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் உலகில் உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றென உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....