follow the truth

follow the truth

April, 27, 2025
HomeTOP1மியன்மார் சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

மியன்மார் சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

Published on

மியன்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக நாடு திரும்பியது.

மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தின் பின் இந்த முப்படை நிவாரண குழு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஏப்ரல் 5 ஆம் திகதி மியன்மாருக்கு அனுப்பப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களின் மேற்பார்வையின் கீழ் மற்றும் வெளியுறவு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந்நடவடிக்கை மேகொள்ளப்பட்டது.

அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய இந்தக் குழு, இடம்பெயர்ந்த மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்ய சூழ்நிலை மதிப்பீட்டை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து நடமாடும் மருத்துவமனைகளை நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்கத் தொடங்கியது.

தம் நாட்டுக்கு மிகவும் அவசியமான வேளையில் வழங்கப்பட்ட உதவிக்கு மியன்மார் அதிகாரிகள் இலங்கை பாராட்டியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் பரஸ்பர நட்பின் அடையாளமாக இதை கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான...

உயர்தர பரீட்சையின் மீளாய்வுக்கான விண்ணப்பம் கோரல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02 ஆம்...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய...