follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகூட்டுப் பொறுப்பை மீறிய அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது -...

கூட்டுப் பொறுப்பை மீறிய அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது – ஜனாதிபதி

Published on

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க முடியாத அமைச்சர்கள் இருப்பின் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக அரசாங்க அமைச்சர்கள் மூவரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வினவியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பது அமைச்சரவை அமைச்சர்களின் பொறுப்பாகும் எனவும் அது முடியாத பட்சத்தில் அமைச்சரவையில் இருந்து விலகுவதே சிறந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...