நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் போட்டியின் 38-ஆவது தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
இம்முறை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. அடுத்து வரிசையாக 5 தோல்விகளை சந்திக்க, கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. லக்னோவை வீழ்த்தி, ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியது.
இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் 8 போட்டிகள் முடிவில் தலா 3 வெற்றியுடன் சமநிலையில் இருக்கும்.
தற்போதைய நிலவரப்படி, புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 7வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.