follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை - பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “வடக்கு மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களில் ஜனாதிபதி ஆற்றிய உரைகளை, தமிழ்த் தலைவர்களும் உறுப்பினர்களும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ் மக்களை ஏமாற்றி வந்த தமிழ்க் கட்சிகளுக்கு, ஜனாதிபதியின் உரையை விமர்சிக்க எந்த நியாயமும் இல்லை. வடக்கில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே ஜனாதிபதி உரையாற்றினார்.

அவரின் உரை, தமிழ்க் கட்சிகளில் தேர்தல் தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது. அதனால்தான் அவர்கள் கட்டுக்கடங்கா விமர்சனங்களைச் செலுத்துகின்றனர். தமிழ் மக்களின் ஆதரவை அவர்கள் தடுக்க இயலாது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிராக நிற்கின்றனர். கடந்த காலங்களில் வடக்கும் தெற்கும் இனவாதம், மதவாதம் மூலம் அரசியல் நடத்தப்பட்டதை நிறைவு செய்யும் நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்துள்ளது.

வடக்கில் திஸ்ஸ விகாரையை முன்வைத்து இனவாத அரசியலை ஊக்குவிக்க எமது அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய அரசிலும் உள்ளூர் ஆட்சிகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்தால், அது நாடு மற்றும் மக்களுக்குப் பெரும் நன்மைகளைத் தரும்.

ஏனெனில், ஊழலும் மோசடிகளும் இல்லாத ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி. இதை எமது ஜனாதிபதியும் எமது கட்சி உறுப்பினர்களும் வெளிப்படையாகச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை,” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...