follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் - ஜனாதிபதி

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

Published on

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் பல தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் தற்போது செல்வந்தர்களாக வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

மீண்டும் அவர்கள் வடக்கு கிழக்கிற்குத் திரும்பி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் வசிக்கின்ற மக்களது நலனுக்காக அவர்களிடத்தில் இந்த அழைப்பை விடுக்கிறேன்.

வடக்கில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் தெங்கு உள்ளிட்ட பயிர்செய்கையை மேற்கொள்ளலாம்.

அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுப்பதற்குச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...