follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு

Published on

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.

இது 0.1 சதவீத அதிகரிப்பாகும்.

அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கையில் செயலில் இருந்த கடன் அட்டைகள் 91,371 ஆக, அதாவது 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளன.

அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மட்டும் 19,076 கடன் அட்டைகள் அதிகரித்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், 2022 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் திவாலாகியது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்றும் மத்திய வங்கி அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வட்டி வீதங்களை மாபெரும் அளவில் உயர்த்தியதையடுத்து, 2023 ஆம் ஆண்டு செயலில் உள்ள கடன் அட்டைகள் 39,991 ஆக, அதாவது 1.8 சதவீதமாக குறைந்திருந்தன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டின் அதி உச்சமான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...