follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்கள் சிலவற்றை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்கள் சிலவற்றை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

Published on

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள தூதரகங்களில் 10 தூதரகங்களும், 17 துணைத் தூதரகங்களும் அடங்குகின்றன.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள சில தூதரகங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சோமாலியா, ஈராக், மால்டா (Malta), லக்சம்பர்க் (Luxembourg), கொங்கோ மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிரான்சில் அமெரிக்காவிற்கு ஐந்து தூதரகங்கள் செயல்பட்டு வருவதால், அவற்றையும் மூட முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஜெர்மனி மற்றும் போஸ்னியாவில் உள்ள இரண்டு தூதரகங்கள் மற்றும் பிரித்தானியாவிலுள்ள ஒரு தூதரகத்தை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மூடப்படவுள்ள தூதரகங்களின் பணிகள், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...