சுகாதார வழிகாட்டுதலின்படி வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபா் சி.டீ.விக்ரமரத்ன பணித்துள்ளாா்.
திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிகிழமைகளில் காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், ஞாயிறு மாலை 6 மணி முதல் 12.30 மணி வரை வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.