follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுமூன்று தூதரகங்களுக்கு தற்காலிக பூட்டு

மூன்று தூதரகங்களுக்கு தற்காலிக பூட்டு

Published on

எதிர்வரும் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானமானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றையே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த முடிவு, இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பதவிகளின் வலையமைப்பின் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவும் பாரிய பொருளாதார சவால்களின் பின்னணியில், இருதரப்பு உறவுகளை திறம்பட நடத்துவதை உறுதி செய்யும் அதேவேளையில், நாட்டிற்கு தேவையான வெளிநாட்டு கையிருப்புகளை பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணிகள்/பதவிகளை பராமரிப்பது தொடர்பான செலவினங்களை குறைக்கும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...