follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1கடந்த 02 நாட்களில் விபத்துகள் காரணமாக 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 02 நாட்களில் விபத்துகள் காரணமாக 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Published on

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துகளில் பெரும்பாலானவை வீடுகளில் இடம்பெற்றவை எனவும், அவ்வாறு 110 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

வீதி விபத்துகள் காரணமாக 94 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் பட்டாசு விபத்துகள் காரணமாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், ஏப்ரல் 13, 14 ஆகிய 2 நாட்களிலும் 2 பேர் மாத்திரமே இது தொடர்பில் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீட்டின் 2ம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த சிறுவன் – விசாரணை ஆரம்பம்

வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...

அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிக்க விசேட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால்...

வாக்காளர் அட்டைகள் நாளை தபால் திணைக்களத்திடம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்கான...