சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று(15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.
சிங்கப்பூரின் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.