பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, இன்று (15) முதல் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வழக்கமான கால அட்டவணையின் கீழ், இன்று மற்றும் நாளையும் பேருந்துகள் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்திருந்தார்.
நாளை மறுநாளிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக விசேட பேருந்து சேவையும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால், அலுவலக ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைகளைப் பொருத்து இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.