follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, இன்று முதல் பேருந்து சேவை

பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, இன்று முதல் பேருந்து சேவை

Published on

பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, இன்று (15) முதல் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வழக்கமான கால அட்டவணையின் கீழ், இன்று மற்றும் நாளையும் பேருந்துகள் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்திருந்தார்.

நாளை மறுநாளிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக விசேட பேருந்து சேவையும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால், அலுவலக ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைகளைப் பொருத்து இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...