follow the truth

follow the truth

April, 15, 2025
HomeTOP1இரு நாட்களில் உச்சம் தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய்

இரு நாட்களில் உச்சம் தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய்

Published on

கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் 100 மில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அதிவேக நெடுஞ்சாலையில் பணம் செலுத்தும் வசதி மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதன் முன்னோடித் திட்டம் கடந்த 10 ஆம் திகதி தொடங்கியது. அதன்படி, கொட்டாவ மற்றும் கடவத்தை பரிமாற்றங்களில் வங்கி அட்டைகள் மூலம் சாரதிகள் அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெப் மற்றும் லொறி மீது பேருந்து மோதி கோர விபத்து – ஒருவர் பலி

அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...