follow the truth

follow the truth

April, 14, 2025
HomeTOP1வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Published on

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது.

இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும்.

2020 டிசம்பரில் இலங்கை பெற்ற 812.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் தவிர்த்து, வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய அதிகபட்ச பணப்பரிமாற்றம் இதுவாகும்.

இந்தத் தரவு அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட வாராந்திர பொருளாதார அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெப் மற்றும் லொறி மீது பேருந்து மோதி கோர விபத்து – ஒருவர் பலி

அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...