follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை

எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை

Published on

முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(08) உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று (08) வரை நீடிக்கப்பட்டது.

இதே வழக்கில், கடந்த ஆண்டு வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது, விசாரணைகள் தொடரும் நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...