follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஅவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : மூவர் காயம் (படங்கள்)

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : மூவர் காயம் (படங்கள்)

Published on

கட்டான கிம்புலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான சேவை நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் இருந்து சிகிரியாவிற்கு சுற்றுலா பயணிகளுடன் பயணித்த தனியார் விமானம் மீண்டும் கொக்கல நோக்கி பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விபத்தில் விமானி உட்பட காயமடைந்த மூவரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.No description available.

No description available.

May be an image of 8 people, aircraft and outdoors

May be an image of 2 people, aircraft and outdoors

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....