follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1கோசல ஜயவீர மறைவு : வெற்றிடமாக உள்ள எம்.பி. பதவி குறித்து அறிவிப்பு

கோசல ஜயவீர மறைவு : வெற்றிடமாக உள்ள எம்.பி. பதவி குறித்து அறிவிப்பு

Published on

கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் மறைவு காரணமாக, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிமுறைகளின்படி, 2025 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி முதல் 10வது பாராளுமன்றத்தில் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஒன்று உருவாகியுள்ளதாக, பாராளுமன்றத்தின் பதில் பொது செயலாளர் சமிந்த குலரத்ன தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

1988 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க வாக்கெடுப்பு (சிறப்பு விதிமுறைகள்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64(1) பிரிவின்படி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கோசல நுவன் ஜயவீரா நேற்றுமுன்தினம் (06) மறைந்தார். அவர் மறையும் போது அவருக்கு 38 வயது ஆகியிருந்தது.

kosala nuwan 1

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...