நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பாரஸ்ட் அல்லது டெய்சி பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று அழைக்கப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுவது சாதாரண விடயமாகி விட்டது எனவும் தெரிவித்திருந்தார்.