மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.