எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்றிரவு கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் 50க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொத்மலை மற்றும் இறம்பொடை போன்ற பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கண்டித்தும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடன் குரல் எழுப்பியிருந்தனர்.