follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP1மியன்மாருக்கு செல்லவுள்ள இலங்கை வைத்திய குழு

மியன்மாருக்கு செல்லவுள்ள இலங்கை வைத்திய குழு

Published on

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மியன்மார் அரசாங்கம் அறிவித்தவுடன் சம்பந்தப்பட்ட வைத்தியக் குழுவை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

களுத்துறை பிரதேசத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியபோது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

“மியன்மாருக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள், அதேபோல் தேவையான மற்ற பொருட்களை வழங்குவதற்கு இப்போது அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கைகளை தயார் செய்து வருகிறது. அதேபோல், இந்த நேரத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு வைத்திய உதவி தேவைப்படுகிறது. அதன்படி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அனுபவம் வாய்ந்த விசேட வைத்திய நிபுணவர்கள் சிலருடன் செவிலியர் சுகாதாரக் குழுவை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளோம். இதனை நாங்கள் விசேட நடவடிக்கைகள் அமைச்சு மூலம் மியன்மார் தூதரகத்திற்கு தெரிவித்தோம். அவர்கள், தயாராக வைத்திருக்குமாறு கூறினார்கள், தேவை ஏற்பட்டவுடன் அதனை உடனடியாக தெரிவிப்பதாக கூறினார்கள். அதன்படி, செய்தி வரும் வரை தேவையான உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியப் பிரதமரின் வருகைக்காக நாளைமறுதினம் விசேட போக்குவரத்து திட்டம் அமுலுக்கு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

இங்கிலாந்து தடைகள் குறித்த ஆராய அமைச்சர்கள் குழு

இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவத் தலைவர்கள் உட்பட நான்கு பேர் மீது இங்கிலாந்து தடைகளை விதித்தது தொடர்பான மேலதிக...

மியன்மாருக்கு இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவி

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு...