ரமழான் பண்டிகை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.