எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கடும் மழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பனாமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே, கொடவெல, தாபனே, தொரப்பனே ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக, எம்பிலிப்பிட்டிய – தொரப்பனே வீதியின் இருபுறமும் கொடவெல மற்றும் கெம்பனே பகுதிகளில் மண் மேடுகள் மற்றும் மரங்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
தொரப்பனேயிலிருந்து ஊருபொக்க செல்லும் வீதியும் கொடவெலகந்த மற்றும் கெம்பனே பகுதிகளில் தடைப்பட்டுள்ளமை காரணமாக, மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.