follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதிருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி பிரயோகம் - விசேட விசாரணை ஆரம்பம்

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கி பிரயோகம் – விசேட விசாரணை ஆரம்பம்

Published on

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (24) இரவு பொலிஸ் போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 02 சார்ஜன்ட்கள் மற்றும் 02 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதன்போது காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் இரண்டு பொலிஸ் உத்திகேத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய சார்ஜன்ட், T-56 ரக இரண்டு துப்பாக்கிகளும் 19 ரவைகளுடன் எத்திமலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதன் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...