பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று (27) அறிவித்துள்ளது.
இந்த மூன்று உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.