follow the truth

follow the truth

March, 30, 2025
HomeTOP1நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது - வௌிவிவகார அமைச்சு

நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது – வௌிவிவகார அமைச்சு

Published on

முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இலங்கையில இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக குறிப்பிட்டு ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வுபெற்ற அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு தடை விதிப்பதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.

இவர்களை தவிர ELLT அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.

நாடுகள் மேற்கொள்ளும் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது என ஐக்கிய இராச்சியத்தின் இந்த தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பாக உள்ளகப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்கிடம் வௌிவிவகார அமைச்சில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

15 – 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட...

வாக்குமூலம் பெற மிப்லாள் மௌலவியை அழைத்த குற்றப்புலனாய்வு பிரிவு

ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரியும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த...

முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை

ரமழான் பண்டிகை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம்...