follow the truth

follow the truth

March, 29, 2025
HomeTOP1இராஜ் CID முன்னிலையில் ஆஜர்

இராஜ் CID முன்னிலையில் ஆஜர்

Published on

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன இன்று (26) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

நேற்று (25) தனது யூடியூப் சேனலில் சுதத்த திலகசிறி தொடர்பில் வெளியிட்ட ஒரு தகவல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தலதா மாளிகைக்கு பணம் வழங்குமாறு மோசடியான முறையில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வௌியிட்டதாக தெரிவித்த இராஜ், குறித்த காணொளி உலகிலுள்ள பெரும்பாலான இலங்கையர்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த வருடத்தில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக பதிவு

கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நேயாளர்களில் 5,291 ஆண்கள்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை...

பாங்கொக்கில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில்...