அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (27) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை எட்டரை மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.