follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP2EPF நிதி செலுத்தாத 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் - அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்

EPF நிதி செலுத்தாத 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் – அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்

Published on

அரசாங்க, அரச சார்பு மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு உட்பட்ட 22,450 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான 36 பில்லியன் ரூபா சேமநல நிதியை செலுத்தத் தவறிவிட்டதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமநல நிதியாக செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தத் தவறிய இந்த நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில் திணைக்களத்தின் புதிய ஆணையர் நாயகத்தின் பதவியேற்பு நிகழ்வின்போது ஊடகவியராளர்கள் மத்தியில் நேற்று (24) உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

பாதுகாக்கப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் தனது தொழில்வாய்ப்புக்கு உட்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் ஊழியர் சேமலாப நிதி பங்களிப்புகளை செலுத்தும் பொறுப்பு முதலாளிக்கு உண்டு.

தவறு செய்யும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து விரைவில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படும். இந்த முயற்சியின் மூலம், தொழில் திணைக்களத்தின் முழு செயற்பாடுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...