follow the truth

follow the truth

March, 28, 2025
HomeTOP2அதானி மட்டுமல்ல, யாராயினும் நாங்கள் சொல்லும் வழியில் தான் முதலீடு செய்ய வேண்டும்

அதானி மட்டுமல்ல, யாராயினும் நாங்கள் சொல்லும் வழியில் தான் முதலீடு செய்ய வேண்டும்

Published on

அதானி அல்லது வேறு எந்த வெளிநாட்டு முதலீட்டாளரோ இந்த நாட்டில் முதலீடு செய்ய வேண்டுமாயின் அது முதலீட்டாளர்கள் விரும்பும் விதத்தில் அல்ல, நாம் எதிர்பார்க்கும் சூழ்நிலைகளின் கீழ் செய்யப்பட வேண்டும் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கூறுகிறார்.

தேசிய தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறினாலும், அது இப்போது பொய்யாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியேறிய முதலீட்டாளர்கள் யார் என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.

அதானி நிறுவனம் ஒரு யுனிட் மின்சாரத்திற்கு 8.26 அமெரிக்க சென்ட் விலைக்கு ஒப்புக்கொண்ட போதிலும், அவரது நிர்வாகம் ஒரு யுனிட் மின்சாரத்திற்கு 5 அமெரிக்க சென்ட் விலைக்கு ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், எந்தவொரு முதலீட்டாளரும் 50:50 என்ற விகிதத்தில் வர வேண்டும் என்றும், இல்லையெனில் தற்போதைய நிர்வாகம் முந்தைய ஆட்சியாளர்களைப் போல முதலீட்டாளர்கள் விரும்பும் வழியில் செயல்படத் தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் செயற்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை...

சார்ல்ஸ் மன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கொண்ட புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக இது ஏற்பட்டதாக...

போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை – பொன்சேகா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என...