follow the truth

follow the truth

March, 26, 2025
Homeவிளையாட்டுDPL இல் விளையாடிக் கொண்டிருந்த தமீம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு

DPL இல் விளையாடிக் கொண்டிருந்த தமீம் இக்பாலுக்கு திடீர் மாரடைப்பு

Published on

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான தமீம் இக்பாலுக்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது.

குறித்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியின் போது தமீம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்திற்கு விரைந்த மருத்துவக் குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும் விமானம் மூலம் அவரை டாக்காவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் பாசிலதுன்னேசா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பயிற்சியாளராக சாமர சில்வா நியமிப்பு

இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சாமர சில்வா, இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச...

அஹமதாபாத் மைதானத்தில் வரலாற்று சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11...

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சாமர சில்வா

இலங்கை 19 வயதுக்குட்பட்ட இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சாமர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் முதலாம்...