follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

[UPDATE] தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

Published on

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை(27) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

25 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் நாளை(27) இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

——————————-[UPDATE]

புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தம்

25 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக புகையிரத பொது முகாமையாளர் கடிதம் மூலம் நேற்று(25) தொழிற்சங்கங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

எனினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் தொழிற்சங்க துறையினருடன் இன்று(26) தொலைக்காணொளி ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...