follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

Published on

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக அரசியல் அதிகார தரப்பு என்ற வகையில் வசதிகளை வழங்க தமது அரசாங்கம் தயாரெனவும் தெரிவித்தார்.

தென் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று(18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அடிப்படைச் சட்டத்திற்கு அனைவரும் பணிய வேண்டுமெனவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்தை சார்ந்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

திட்டமிட்ட வன்முறை செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பிலான வன்முறைகள் தொடர்பான தரவுகள் குறித்து தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகள் இதன்போது ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தியதுடன், குற்றத் தடுப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அழுத்தங்களின்றி பிரஜைகளின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் செயற்பாடுகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து நீதிமன்றில் ஆஜர்

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00...

கட்டான பகுதிக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு...