follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP2விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் - நாமல் கருணாரத்ன

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் – நாமல் கருணாரத்ன

Published on

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியம் 2,934,310 ரூபாய் கொள்ளியிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த விவசாயிகளின் உர மானியத்துக்கான நிதி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கார் மற்றும் ஒரு நூலகம்..- அமைச்சர் செனவி..

ஒவ்வொரு குடும்பமும் ஒரு காரையும் நூலகத்தையும் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கும் என்று அமைச்சர்...

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...