follow the truth

follow the truth

March, 19, 2025
HomeTOP2விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் - நாமல் கருணாரத்ன

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் – நாமல் கருணாரத்ன

Published on

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியம் 2,934,310 ரூபாய் கொள்ளியிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த விவசாயிகளின் உர மானியத்துக்கான நிதி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலின் குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய...

மற்றொரு கோர விமான விபத்து – 12 பேர் பலி

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் நடந்த விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர்...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். 2024 ஜூன் 5 ஆம்...