follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP2இன்று பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

இன்று பூமிக்கு திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

Published on

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.

இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா நிறுவனம் இணைந்து கடந்த 15 ஆம் திகதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.

நேற்று (17) இரவு 10.45 அளவில் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது .

இந்த விண்கலம் இன்று (18) மாலை 5.57 அளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய நாசா தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கார் மற்றும் ஒரு நூலகம்..- அமைச்சர் செனவி..

ஒவ்வொரு குடும்பமும் ஒரு காரையும் நூலகத்தையும் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கும் என்று அமைச்சர்...

இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான மிலேச்ச தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார...

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...