follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1இன்று திட்டமிட்டபடி சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

இன்று திட்டமிட்டபடி சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

Published on

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பளப் பிரச்சினை தொடர்பாக நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (18) காலை 7 மணி முதல் சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 18 தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

இதன் காரணமாக, அரச வைத்தியசாலைகளின் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்பநல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகள் இன்று பாதிப்படையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் வைத்தியசாலைகளில் அவசர, அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் சேவைகள் மாத்திரம் வழங்கப்படுமென குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும், நாடளாவிய ரீதியில் சிறுவர் மற்றும் மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், மனநல மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படமாட்டாது எனச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள்,...

“Clean Sri Lanka” வேலைத்திட்டம் – வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05...

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...