follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉலகம்போப் பிரான்சிஸ் உடல் நிலையில் முன்னேற்றம்

போப் பிரான்சிஸ் உடல் நிலையில் முன்னேற்றம்

Published on

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பெப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது முதல் புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் போப் பிரான்சிஸ் வழிபாட்டு உடைகளின் வழக்கமான ஊதா நிற ஸ்டோலை அணிந்து, மருத்துவமனை தேவாலயத்தின் பலிபீடத்திற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது காட்டப்பட்டுள்ளது.

ஜெமெல்லி மருத்துவமனையின் 10-வது மாடியில் உள்ள போப்பாண்டவர் குடியிருப்பில் மற்ற பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் என வாடிகன் தெரிவித்துள்ளது.

மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் கூறுகையில், எனக்காகப் பல குழந்தைகள் ஜெபிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களில் சிலர் இன்று ஜெமெல்லிக்கு வந்தனர். அன்பான குழந்தைகளே நன்றி, போப் உங்களை நேசிக்கிறார், உங்களைச் சந்திக்க எப்போதும் காத்திருக்கிறார் என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவு – 1300 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (Voice of America) செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான...

செர்பியாவில் மாபெரும் போராட்டம் – அரசுக்கு எதிராக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

கடந்த சில மாதங்களாக செர்பியாவை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை செர்பியாவின் தலைநகரில்...

கோபகபானா கடற்கரையில் திரண்ட மக்கள்

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று(16) கோபகபானா கடற்கரையில் திரண்டனர். அடுத்த வருடம்...