follow the truth

follow the truth

March, 17, 2025
HomeTOP2கோபகபானா கடற்கரையில் திரண்ட மக்கள்

கோபகபானா கடற்கரையில் திரண்ட மக்கள்

Published on

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று(16) கோபகபானா கடற்கரையில் திரண்டனர்.

அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பாக , தனது பலத்தை வெளிப்படுத்தும் விதமாக போல்சனாரோ பிரபலமான கடற்கரையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கு மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அன்று பிரேசிலின் தலைநகரில் நடந்த கலவரத்தில் தண்டனை பெற்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு பொது மன்னிப்பு கோருவதே இந்தப் பேரணியின் நோக்கமாகக் கூறப்படுகிறது

இதேவேளை சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு காங்கிரஸிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து ஜனாதிபதி மாளிகை, காங்கிரஸ் மற்றும் உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரேசிலின் தேசிய கால்பந்து அணியின் ஜெர்சி அணிந்து கோஷமிட்டப்படி பதாகைகளை ஏந்திக் கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தில் சுமார் 18,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல்...

மேர்வின் சில்வாவிற்கு மீண்டும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மார்ச் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அவர்...

செர்பியாவில் மாபெரும் போராட்டம் – அரசுக்கு எதிராக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

கடந்த சில மாதங்களாக செர்பியாவை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை செர்பியாவின் தலைநகரில்...