பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோரப் பாதையில் ரயில்கள் தாமதமாகி வருவதாக குறித்த துறை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ரயில், வேறொரு ரயில் மூலம் பாணந்துறை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே துறை மேலும் தெரிவித்துள்ளது.