follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

Published on

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தப் பரீட்சையில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பங்குபற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளை ஆரம்பமாகவுள்ள இந்த பரீட்சைக்கு பரீட்சை மண்டபத்திற்கு தேவையற்ற பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை ஆணையாளர் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, எந்தவொரு பரீட்சார்த்தியும் இந்த விதிகளை மீறினால், அது பரீட்சை பிழையாகக் கருதப்பட்டு, அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகைய நபர் 05 ஆண்டுகளுக்கு பரீட்சைக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

எதிர்வரும் சில வருடங்களில் கண்டியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத்...

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...