follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP1படலந்த அறிக்கை விவாதத்திற்கான திகதி அறிவிப்பு

படலந்த அறிக்கை விவாதத்திற்கான திகதி அறிவிப்பு

Published on

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விவாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அதன் பதில் பணிப்பாளர் ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 10 ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 9.30 மணி – 10.00 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22யின் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பாராளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதத்தை நடத்தவும், மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

எதிர்வரும் சில வருடங்களில் கண்டியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத்...

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...