follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉள்நாடுஇலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

Published on

ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் 15,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.

அங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரையும் அவரது மனைவியையும் விடுவிப்பதற்கும், வழக்கை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட சார்ஜன்ட் மேற்கண்ட தொகையை இலஞ்சமாகக் கோரியிருந்தார்.

இருப்பினும், அவர் முதலில் 20,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய நிலையில், பின்னர் அதை 15,000 ரூபாவாக குறைத்து, பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா...

நியாயமான சந்தையில் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள இலங்கைக்கு JICA மற்றும் JFTC ஆதரவு

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை...

பாடசாலை கிரிக்கெட் போட்டி – விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பதில்...